சார்பதிவாளர் அலுவலகத்தில் நாளை சுபமுகூர்த்த தினத்தை ஒட்டி கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.சுபமுகூர்த்த தினங்களில் சார் பதிவாளர் அலுவலகங்களில் அதிக அளவு ஆவணப்பதிவுகள் நடைபெறும். இதனால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளன. இதன் அடிப்படையில் நாளை சுப முகூர்த்த தினமாக உள்ளதால் கூடுதல் வில்லைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகத்தில் 100க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு 200 க்கு பதில் 300 முன்பதிவு வில்லைகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் ஆவணபதிவு நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகள் மற்றும் 12 தட்கல் முன்பதிவு வில்லகளுடன் கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகள் வழங்க பத்திரப்பதிவு துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.