அபுதாபி இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி என்று அழைக்கப்படும் ADIA அமைப்பு, லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
லென்ஸ்கார்ட் நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய கண்ணாடி விற்பனை நிறுவனமாக உள்ளது. இதன் மொத்த மதிப்பு 4 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக சொல்லப்படுகிறது. தற்போது, லாபகரமாக இயங்கி வரும் இந்த நிறுவனம், விரைவில் 48 மாதங்களுக்குள்ளான ஐபிஓ -வை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியமானதாக சொல்லப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வாரத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.














