ஆதித்யா எல்-1 விண்கலம் சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்டது.
இந்தியா முதன்முதலில் சூரியனைக் ஆய்வு செய்ய ஆதித்யா எல்-1 என்னும் விண்கலத்தை உருவாகியுள்ளது. இது பூமியில் சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் "லெக்ரஞ்சியன் பாய்ண்ட் ஒன்" என்னும் இடத்தில் சூரியனை நோக்கும் கோணத்தில் நிலை நிறுத்தப்படும்.
இதன் மூலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றும் விண்வெளியின் காலநிலை ஆகியவை கணக்கிடப்படும். இந்த ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்கள் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர். 7 முக்கிய கருவிகளில், 4 கருவிகள் சூரியனை நேரடியாக ஆய்வு செய்யவும், 3 பெலோடுகள் லேக்ரஞ்சியின் புள்ளியில் உள்ள துகள்கள் பற்றி ஆய்வு செய்யவும் உருவாக்கப்பட்டுள்ளது.