புவியின் இரண்டாவது சுற்று வட்ட பாதைக்கு சென்ற ஆதித்ய எல் -1 விண்கலம்

September 5, 2023

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பப்பட்டது. இது தற்போது பூமியின் இரண்டாவது சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது என இஸ்ரோ அறிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 2-ம் தேதி PSLV- 57 ராக்கெட் ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்து கொண்டு சூரியனை ஆய்வு செய்வதற்காக வெற்றிகரமாக அனுப்ப்பட்டது. இது பூமியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் ஆனது அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ட்ரோ […]

சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலம் அனுப்பப்பட்டது. இது தற்போது பூமியின் இரண்டாவது சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது என இஸ்ரோ அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 2-ம் தேதி PSLV- 57 ராக்கெட் ஆதித்யா எல்-1 விண்கலத்தை சுமந்து கொண்டு சூரியனை ஆய்வு செய்வதற்காக வெற்றிகரமாக அனுப்ப்பட்டது. இது பூமியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இந்த விண்கலம் ஆனது அடுத்த ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி அதன் இலக்கை அடையும் என இஸ்ட்ரோ தெரிவித்துள்ளது. இந்த விண்கலமானது 4 மாதங்களுக்கு பின்பு இருந்த இடத்திலேயே இருந்து கொண்டு கிரகணங்கள் அல்லது மறைவுகளால் தடையின்றி தொடர்ந்து சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் ஈடுபடும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த விண்கலத்தின் சுற்றுவட்ட பாதை வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது. இதன் அடுத்த நடவடிக்கை 5-ம் தேதி மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்த நிலையில் இன்று புவியின் இரண்டாவது சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. மேலும் அடுத்த சுற்றுவட்ட பாதைக்கு 10ஆம் தேதி மாற்றம் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu