சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக செப்டம்பர் இரண்டாம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
பிஎஸ்எல்வி சி 57 ராக்கெட் மூலம் இஸ்ரோ நிறுவனம் ஆதித்யா எல்1 விண்கலத்தை செப்டம்பர் இரண்டாம் தேதி சூரியனை ஆய்வு செய்வதற்காக வெற்றிகரமாக விண்ணை நோக்கி ஏவியது. இந்த விண்கலம் 125 நாட்கள் பயணம் செய்து பூமியில் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரஞ்சியான் புள்ளி 1 ஐ சென்றடையும். தற்போது இந்த விண்கலம் புள்ளியை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கின்றது. சூரிய அனலில் இருந்து வெளியாகும் எக்ஸ் கதிர்களை முதல் முறையாக படம் எடுத்து தற்போது அனுப்பியுள்ளது.கடந்த 29ஆம் தேதி பதிவான படத்தை கிராப் வடிவில் இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ளது. இந்த விண்கலம் அனுப்பிய தரவுகள் மூலம் சூரிய ஆற்றல் மற்றும் எலக்ட்ரான் குறித்த ஆய்வு செய்ய உதவும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.