சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் - 1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது.
செப்டம்பர் 02 ஆம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் ஆதித்யா எல் - 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இது 125 நாட்கள் பூமியில் பயணம் செய்து, 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லாக்ரஞ்சியன் புள்ளி -1 யை சென்றடையும். இந்த நிகழ்வின் போது விண்கலம் 16 நாட்கள் பூமியை சுற்றி வரும் பொழுது 5 முறை அதன் சுற்றுப்பாதை உயர்த்தப்படுகிறது. அந்த வகையில் முதல் கட்ட பணி கடந்து மூன்றாம் தேதி நடந்தது. இதன் இரண்டாம் கட்ட பணி நான்காம் தேதி உயர்த்தப்பட்டது. தற்போது மூன்றாவது கட்டமான சுற்றுவட்ட பாதை உயர்த்தும் பணி நேற்று நடைபெற்றது. அதன்படி குறைந்தபட்ச உயரம் 282 கிலோமீட்டர் அதிகபட்சமாக 40 ஆயிரத்து 225 கிலோ மீட்டர் என்ற அளவில் உள்ளது. இதன் அடுத்த கட்ட பணியை வருகின்ற 15-ம் தேதி மதியம் 2 மணி அளவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இதனை இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இது 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் பூமியில் நிலை நிறுத்தப்பட உள்ளது. அதன் பின் அது சூரியனை ஆராய்ச்சி செய்யும் பணியில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளனர்.