ஆதித்யா எல் -1 விண்கலம் சூரியனை ஆய்வதற்காக அனுப்பியுள்ள நிலையில் புவியின் நான்காவது சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல் -1 விண்கலம் பி.எஸ்.எல்.வி.சி- 57 ராக்கெட் மூலம் கடந்த இரண்டாம் தேதி சூரியனை நோக்கி வெற்றிகரமாக பயணம் செய்தது. பின்னர் விண்கலம் புவியின் சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அதன் இலக்கை சென்று அடையும். அங்கிருந்து கிரகணங்கள் மற்றும் மறைவுகளால் தடையின்றி சூரியனை கண்காணித்து ஆய்வு பணியில் ஈடுபட உள்ளது. இந்நிலையில் இதன் சுற்றுவட்டப் பாதைகள் ஒவ்வொரு கட்டமாக உயர்த்தப்பட்டு வருகிறது. தற்போது இதில் புவியின் 4 வது சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இதன் ஐந்தாம் சுற்றுவட்ட பாதை 19ஆம் தேதிக்கு மாற்றப்படும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.