டிசம்பர் 18 வரை பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

December 15, 2023

பாராளுமன்ற அவையில் நேற்று முன்தினம் வண்ணப் புகை குண்டு தாக்குதல் நடைபெற்றது. பாராளுமன்றத்திற்கு வெளியேயும், மக்களவைக்கு உள்ளேயும் புகை குண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் நான்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு சம்பவமாக கருதப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கனிமொழி உள்ளிட்ட 15 எம்பிகள் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் […]

பாராளுமன்ற அவையில் நேற்று முன்தினம் வண்ணப் புகை குண்டு தாக்குதல் நடைபெற்றது.

பாராளுமன்றத்திற்கு வெளியேயும், மக்களவைக்கு உள்ளேயும் புகை குண்டு தாக்குதல் நடைபெற்றது. இதில் நான்கு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இது மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடு சம்பவமாக கருதப்பட்டு வருகிறது. இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கனிமொழி உள்ளிட்ட 15 எம்பிகள் மக்களவையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த குளிர்கால கூட்டத்தொடர் முழுவதும் அவர்கள் பங்கேற்க முடியாது எனவும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தைக் கண்டித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர். இதனால் பாராளுமன்ற இரு அவைகளும் டிசம்பர் 18ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu