தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு பட்டதாரி ஆசிரியர்களின் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வுகள் ஜனவரி 7ஆம் தேதி நடைபெறும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேர்வர்களின் சிரமத்தை தவிர்க்க இந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 7 அன்று நடைபெற இருந்த தேர்வு பிப்ரவரி 4ம் தேதி வரை நடைபெறும் என விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி மாதம் நடைபெற இருந்த தேர்வுக்கான நுழைவு சீட்டுகளை பிப்ரவரி மாத தேர்வுக்கு பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.