அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என அறிவிக்க கோரி அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் 21ஆம் தேதி அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனை சட்டவிரோதம் ஆனது என அறிவிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இதன் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். சட்டத்தின்படி விசாரணை நடைபெறும் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமீன் மனு கேட்டு மனு தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமின் 1ஆம் தேதி வரை உள்ள நிலையில் ஜூன் இரண்டாம் தேதி சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது