கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் வேளாண்மை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைப் படுகிறது; தரவரிசை பட்டியல் 24-ந் தேதி வெளியாகிறது
கோவையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மூலம் இந்த ஆண்டுக்கான வேளாண்மை படிப்புகளுக்கான சேர்க்கை தொடங்கியுள்ளது. மொத்தம் 6,921 இடங்களுக்கு 30,333 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கடந்த மாதம் 9-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தற்போது மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு, முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இது ஜூன் 21 வரை நடக்கிறது. தரவரிசை பட்டியல் ஜூன் 24-ம் தேதி வெளியாகிறது. அதே நாளில் பொதுப்பிரிவு மற்றும் 7.5% இடஒதுக்கீட்டுக்கான ஆன்லைன் கலந்தாய்வும் தொடங்குகிறது. பொதுப்பிரிவு கலந்தாய்வு 27-ம் தேதி வரை நடைபெறும் என்றும், சிறப்பு பிரிவுக்கான கலந்தாய்வு ஜூன் 27-ம் தேதியே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.