பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் எல்லைப்படை துப்பாக்கிச் சூடு- ஏழு பேர் பலி

December 12, 2022

ஆப்கானிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி வந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் படைகள் பொதுமக்கள் மீது பீரங்கி மூலம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதில் குறைந்தது ஏழு பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகவும், 31 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. ஆப்கான் […]

ஆப்கானிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர், பாகிஸ்தான் எல்லையைத் தாண்டி வந்து பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சாமன் மாவட்டத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். இதில் ஏழு பேர் உயிரிழந்தனர். மேலும் 31 பேர் காயமடைந்தனர்.

இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தான் படைகள் பொதுமக்கள் மீது பீரங்கி மூலம் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இதில் குறைந்தது ஏழு பாகிஸ்தானியர்கள் உயிரிழந்ததாகவும், 31 பேர் காயமடைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆப்கான் படைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பலுசிஸ்தானின் மாகாணத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமையின் தீவிரம் குறித்து காபூலில் உள்ள ஆப்கானிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள் எச்சரித்ததுடன், மீண்டும் இது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க கடும் நடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தி உள்ளனர்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu