ஆப்கானிஸ்தான் நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 நாட்களில் வெள்ளம் காரணமாக மட்டும் 33 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாகாணங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 600 வீடுகள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. சுமார் 800 ஹெக்டேர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், 200க்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அத்துடன், முக்கிய சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. முக்கிய பகுதிகளை இணைக்கும் பாலங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளன. மனிதர்களைப் பொறுத்தவரை, 33 பேர் உயிரிழந்துள்ளனர். 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். - இவ்வாறு தலிபான் செய்தி தொடர்பாளர் அப்துல்லா ஜனன் சாயிக் தெரிவித்துள்ளார்.