ஆப்கானிஸ்தான்: ரஷ்ய தூதரகத்தில் குண்டுவெடிப்பு

September 6, 2022

ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், ரஷ்ய தூதர்கள் இருவர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானில் திங்கட்கிழமை காலை ரஷ்ய தூதரகத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில், விசா பெறுவதற்காக காத்திருந்தோர் மற்றும் தூதரக ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தலிபான் அரசுக்கு எதிராக, தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதனைச் செய்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இது குறித்து காபூல் நகர காவல் துறையினர் […]

ஆப்கானிஸ்தானில் உள்ள ரஷ்ய தூதரகத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில், ரஷ்ய தூதர்கள் இருவர் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தானில் திங்கட்கிழமை காலை ரஷ்ய தூதரகத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இதில், விசா பெறுவதற்காக காத்திருந்தோர் மற்றும் தூதரக ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு, இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனால், தலிபான் அரசுக்கு எதிராக, தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபட்டு வரும் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு இதனைச் செய்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. இது குறித்து காபூல் நகர காவல் துறையினர் கூறியதாவது: “தூதரகத்தில் சந்தேகத்திற்கிடமாக நபர் ஒருவர் இருந்தார். அவரை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டனர். அப்போது குண்டு வெடித்தது. அவர் உயிரிழப்பதற்கு முன்னர் தனது உடலில் மறைத்து வைத்திருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தாரா அல்லது காவல்துறையினர் சுட்டதில் குண்டு தானாக வெடித்ததா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ரஷ்ய ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், விசாவுக்காக காத்திருந்த ஆப்கானிஸ்தானியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். மேலும், 10 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை செய்யும் படி, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், தலிபான் அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu