ஆப்கனில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.
காபூல் நகரின் காலா-உ-பக்தியார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் காவல்துறை தகவல்கள் கூறுகின்றன. இந்த கொடூர தாக்குதல்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கான பொறுப்பை இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் ஏற்றதில்லை. மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.














