ஆப்கானிஸ்தானில் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தலிபான் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் போலியோ நோய் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. போலியோ தடுப்பூசி முகாம்கள் நடத்த ஐ.நா. பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் பெரும்பாலானோர், போலியோ சொட்டு மருந்தை சதி எனக் கருதுகின்றனர். குறிப்பாக, இந்த மருந்து குழந்தை பிறப்பை தடுக்கவே வழங்கப்படுவதாக சிலர் நம்புகிறார்கள். இதனால், தடுப்பூசி முகாம்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறுகின்றன.
தற்போது, ஆப்கானிஸ்தானில் நடக்கவிருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் தலிபான் அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அரசு, இந்த தடை பற்றி எந்த விளக்கமும் அளிக்கவில்லை. ஆகவே, இந்த தடையால் லட்சக்கணக்கான குழந்தைகள் போலியோ நோயால் பாதிக்கப்படலாம் என்ற அச்சம் உள்ளது.