ஆப்கானிஸ்தான்: மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 18 பேர் உயிரிழப்பு

September 2, 2022

ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் இன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இஸ்லாமிய மதகுரு உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் நகரின் முக்கியமான மசூதி ஒன்றில், இன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மசூதியில் இருந்த 18 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை ஹெராத் மாகாணத்தின் ஆளுநர் ஹமீதுல்லா உறுதி செய்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில், தாலிபன்களுக்கு ஆதரவளித்த மதகுரு முஜீப் ரஹ்மான் அன்சாரி […]

ஆப்கானிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றில் இன்று நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் இஸ்லாமிய மதகுரு உட்பட 18 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் நகரின் முக்கியமான மசூதி ஒன்றில், இன்று குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், மசூதியில் இருந்த 18 பேர் உயிரிழந்து உள்ளதாகவும் 23 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதனை ஹெராத் மாகாணத்தின் ஆளுநர் ஹமீதுல்லா உறுதி செய்துள்ளார். மேலும், இந்த தாக்குதலில், தாலிபன்களுக்கு ஆதரவளித்த மதகுரு முஜீப் ரஹ்மான் அன்சாரி கொல்லப்பட்டிருப்பதாக தாலிப்பான்களின் செய்தி தொடர்பாளர் சபியுல்லா கூறியுள்ளார். மேலும், “இந்த நாட்டின் தைரியமான மத குருவை இழந்து விட்டோம்” என்று தாலிபான்கள் சார்பில் இரங்கல் செய்தியும் வெளியிடப் பட்டுள்ளது. அத்துடன், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருவதாக தலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சியை எதிர்த்து ஐஎஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் இதுபோன்ற வன்முறை தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். வன்முறைகள் சமீப காலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu