பின்லாந்து - 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலை இயக்கம்

April 17, 2023

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலை, பின்லாந்து நாட்டில் அமைந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த அணு உலை வழக்கமான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பின்லாந்து நாட்டின் மின் தேவை பூர்த்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து, அண்மையில் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்ததால், ரஷ்யாவில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தடைபட்டுள்ளது. அதனை ஈடுகட்டும் விதமாக, இந்த அணு உலையின் மின்சாரம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. பின்லாந்தில் உள்ள Olkiluoto 3 அணு உலை மிகவும் தாமதப்படுத்தப்பட்டு […]

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலை, பின்லாந்து நாட்டில் அமைந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முதல் இந்த அணு உலை வழக்கமான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பின்லாந்து நாட்டின் மின் தேவை பூர்த்தியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்லாந்து, அண்மையில் நேட்டோ கூட்டமைப்பில் இணைந்ததால், ரஷ்யாவில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தடைபட்டுள்ளது. அதனை ஈடுகட்டும் விதமாக, இந்த அணு உலையின் மின்சாரம் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

பின்லாந்தில் உள்ள Olkiluoto 3 அணு உலை மிகவும் தாமதப்படுத்தப்பட்டு வந்தது. அணுமின் நிலையங்கள் மீதான விவாதங்கள் காரணமாக கடந்த 18 ஆண்டுகளாக இந்த அணு உலையில் செயல்பாடுகள் நடத்தப்படவில்லை. கடந்த 2005 ஆம் ஆண்டு, இந்த அணு உலையின் கட்டுமானம் தொடங்கப்பட்டது. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையாக கருதப்பட்ட இது, அடுத்த 4 ஆண்டுகளில் திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால், தொழில்நுட்ப காரணங்களுக்காக அணுமின் நிலையம் தாமதப்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu