மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை நான்கு ஆண்டுகளுக்கு பின் அமல் படுத்தியுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா 2019 ஆம் ஆண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. இதில் டிசம்பர் 31, 2014 ஆம் ஆண்டுக்கு முன்னதாக பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்காளதேச நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மையான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள் ,பார்சிகள், கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்கின்றது. இந்த திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றதில் 100க்கும் மேற்பட்டோர்கள் பலியானர்கள். அதனைத் தொடர்ந்து இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்காக விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதனால் இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை. தற்போது மீண்டும் மத்திய அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. இந்த குடியுரிமை திட்டம் ஆனது 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்தை அரசியலில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது.