பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 3 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்காக மூன்று நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்பட்டன. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து வந்ததால் மொத்தமாக ஐந்து நாட்கள் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் மாவட்ட மற்றும் மாநில மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்தனர். தற்போது விடுமுறை முடிவடைந்த நிலையில் சென்னைக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர். இதனால் சிங்கப்பெருமாள் கோவில் அருகே ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் மதுராந்தகம் அருகே ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அதிக கூட்ட நெரிசலில் சிக்கி உள்ளன. இதனால் அங்கு கூடுதல் கவுண்டர்கள் ஏற்படுத்தி உள்ளனர்.