ஜப்பான் நாட்டை பொறுத்தவரை, பாலுறவுக்கு ஒப்புதல் வழங்கும் வயது 13 ஆக இருந்து வந்தது. தற்போது இந்த வயது வரம்பை 16 ஆக உயர்த்தி, வரலாற்று சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஜப்பானில் நெடு நாட்களாக விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், முக்கிய முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், பாலியல் குற்றங்களுக்கு எளிதில் தண்டனை கிடைக்கும் என கருதப்படுகிறது.
ஜப்பான் நாட்டில், பாலுறவு ஒப்புதலுக்கான வயது 13 ஆக இருந்து வந்ததால், பல்வேறு பாலியல் குற்றங்கள் நடந்து வந்தன. மேலும், பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கான தண்டனையும் இந்த வயது வரம்பு காரணமாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு, தனது பதின் வயது மகளை பாலியல் வன்புணர்வு செய்து வந்த தந்தைக்கு எதிரான வழக்கு விசாரணையைத் தொடர்ந்து, இந்த வயது வரம்பை உயர்த்தும் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வரவேற்புகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த 1907ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஜப்பானில் பாலுறவுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.