கோடீஸ்வரர் பிரையன் ஜான்சன் மற்றும் ஜொமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் ஆகியோர் இணைந்து முஜொமாட்டோ ம்பையில் "டோன்ட் டை" (Don’t Die) என்ற தலைப்பில் ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தினர். இந்த நிகழ்வில், முதுமைக்கு எதிரான பரிசோதனைகளுக்கு பெயர் பெற்ற பிரையன் ஜான்சன், உணவு, உடற்பயிற்சி மற்றும் உணவை முறையாக பயன்படுத்துவதன் மூலம் வயதாவதை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்து விரிவாகப் பேசினார்.
இந்த நிகழ்வில் ஆரோக்கியம், செயற்கை நுண்ணறிவு மூலம் மனித ஆயுளை அதிகரிக்கும் வாய்ப்புகள் மற்றும் எதிர்காலத்தில் மனிதகுலம் எவ்வாறு நலமாக வாழலாம் என்பது பற்றிய விவாதங்கள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் கலந்து கொண்ட டாக்டர்கள் மற்றும் தொழில்நுட்ப ஆர்வலர்கள், பிரையன் ஜான்சனின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்கான தரவு சார்ந்த அணுகுமுறையை பாராட்டினர்.