மார்ச் 22 ஆம் தேதி விண்ணில் பாய்கிறது அக்னிபான் ராக்கெட்

March 18, 2024

ஐ.ஐ.டி மெட்ராஸ் இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட் அப் தயாரித்த அக்னி பான் ராக்கெட் வருகிற 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. இங்கு சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில் முனைவோர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதன் முறையாக சென்னையை […]

ஐ.ஐ.டி மெட்ராஸ் இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட் அப் தயாரித்த அக்னி பான் ராக்கெட் வருகிற 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இரண்டு ஏவதளங்கள் மூலம் பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி மற்றும் எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் ஏவப்பட்டு வருகின்றன. இங்கு சென்னையை சேர்ந்த விண்வெளி தொழில் முனைவோர் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மற்றொரு தனியார் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான ஏவுதளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி முதன் முறையாக சென்னையை தளமாக கொண்ட ஐ.ஐ.டி மெட்ராஸ் இன்குபேட்டட் ஸ்பேஸ் ஸ்டார்ட் அப் தயாரித்த ராக்கெட் வருகிற 22ஆம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த ராக்கெட் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் முதல் ராக்கெட் ஆகும். இது முதல் 3 டி பிரிண்ட் வகையைச் சேர்ந்தது. இந்தியாவின் முதல் அரை கிரையோஜனிக் எந்திரத்தை கொண்டுள்ளது. இந்த ராக்கெட் 100 கிலோ எடை உள்ள செயற்கைக்கோள்களை 700 கிலோமீட்டர் உயரத்திற்கு எடுத்துச் செல்லும் திறன் கொண்டது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu