குஜராத்தின் மோர்பி பால பராமரிப்புக்கான ஒப்பந்தம் : குஜராத் உயர் நீதிமன்றம்

November 16, 2022

குஜராத்தின் மோர்பி தொங்கு பாலத்தின் பராமரிப்புக்கான ஒப்பந்தம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மோர்பியில் அமைந்திருந்த 150 ஆண்டுகால தொங்கு பாலம், கடந்த அக்டோபர் 30ம் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தானாக முன்வந்து குஜராத் உயர் நீதிமன்றம் வழக்காக பதிவு செய்து உள்ளது. தலைமை நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. […]

குஜராத்தின் மோர்பி தொங்கு பாலத்தின் பராமரிப்புக்கான ஒப்பந்தம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என குஜராத் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மோர்பியில் அமைந்திருந்த 150 ஆண்டுகால தொங்கு பாலம், கடந்த அக்டோபர் 30ம் தேதி அறுந்து விழுந்தது. இந்த விபத்தில் 130 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தானாக முன்வந்து குஜராத் உயர் நீதிமன்றம் வழக்காக பதிவு செய்து உள்ளது. தலைமை நீதிபதி அரவிந்த் குமார் தலைமையிலான அமர்வில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த பாலம் பராமரிப்புக்கான ஒப்பந்தம் ஒரேவா குழுமத்துக்கு 2001ல் வழங்கப்பட்டது. இது 2017ல் முடிந்த நிலையிலும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றார்.

இந்த விபத்து தொடர்பாக ஆஜராகும்படி, மோர்பி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால் யாரும் ஆஜராகவில்லை. இந்த ஒப்பந்தம் எந்த அடிப்படையில் செய்யப்பட்டது. பராமரிப்பு பணிக்குப் பின் பாலத்தின் உறுதித்தன்மையை யார் பரிசோதித்தது என அனைத்து விபரங்களுடன் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu