ஏஐ தொழில்நுட்பம் உதவியுடன் மகாராஷ்டிராவில் விவசாயம்

மகாராஷ்டிராவில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கரும்பு விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர். மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியில் விவசாயிகள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பு விவசாயத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றனர். நிம்புட் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான சுரேஷ் ஜெகதாப், காய்கறி மற்றும் பழங்களுக்குப் பின் ஏஐ உதவியுடன் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டார். இந்த தொழில்நுட்பம் வானிலை, மண், மற்றும் பயிர் தகவல்களை சென்சார்கள் மற்றும் டிரோன்கள் மூலம் சேகரித்து விவசாயிகளுக்கு செல்போன் செயலியில் […]

மகாராஷ்டிராவில் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கரும்பு விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மகாராஷ்டிராவின் பாராமதி பகுதியில் விவசாயிகள், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கரும்பு விவசாயத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகின்றனர். நிம்புட் கிராமத்தைச் சேர்ந்த 65 வயதான சுரேஷ் ஜெகதாப், காய்கறி மற்றும் பழங்களுக்குப் பின் ஏஐ உதவியுடன் கரும்பு விவசாயத்தில் ஈடுபட்டார். இந்த தொழில்நுட்பம் வானிலை, மண், மற்றும் பயிர் தகவல்களை சென்சார்கள் மற்றும் டிரோன்கள் மூலம் சேகரித்து விவசாயிகளுக்கு செல்போன் செயலியில் அனுப்புகிறது. இதன் மூலம் தண்ணீர், உரம், பூச்சி கட்டுப்பாடு போன்றவற்றை சீராக பராமரிக்க முடிகிறது. இதன் விளைவாக, கரும்பின் எடை 30-40% அதிகரித்து, சுக்ரோஸ் அளவும் 20% அதிகரித்துள்ளது. இப்போது 20,000 விவசாயிகள் ஏஐ தொழில்நுட்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu