தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன், முன்னாள் பிரதமர் சரண்சிங், நரசிம்மராவ் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் சரண்சிங், நரசிம்மராவ் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ் சுவாமிநாதன் ஆகியோருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்தது. அதன்படி இவர்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவித்து உள்ளார். இதற்கு முன்னதாக பாஜக மூத்த தலைவர் எல்.கே அத்வானி மற்றும் பீகார் முன்னாள் முதல் மந்திரி கர் பூரி தாகூர்க்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. மேலும் ஒரே ஆண்டில் ஐந்து பேருக்கு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.