மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தில் நாசா தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஆர்டெமிஸ் என்ற இந்த திட்டத்தில், இந்தியாவை இணைப்பதற்கு நாசா அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்திற்கு சற்று முன்பு, இத்தகைய பேச்சு வார்த்தைகள் நடைபெறுவது மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. மேலும், அமெரிக்க பிரதமர் ஜோ பிடன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையே, இது தொடர்பாக முக்கிய கலந்துரையாடல் நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நாசாவின் ஆர்டெமிஸ் திட்டத்தில், ஏற்கனவே 25 விண்வெளி அமைப்புகள் இணைந்துள்ள நிலையில், இந்தியா 26 வது நாடாக இணையும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்தியாவும் விண்வெளி துறையில் எண்ணிப் பார்க்க இயலாத வளர்ச்சிகளை எட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, விரைவில் இஸ்ரோவும் நாசாவும் இணைந்து பணியாற்றும் என்று நம்பப்படுகிறது.