ரிலையன்ஸ் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாதனம் - அடுத்த மாதம் வெளியாகிறது

February 21, 2024

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணையோடு இயங்கும் குழு, மார்ச் மாதத்தில் செயற்கை நுண்ணறிவு சாதனத்தை வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்வி நிறுவனங்கள், ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்கி உள்ளன. கிட்டத்தட்ட சாட்ஜிபிடி போலவே இதன் செயல்பாடுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. பாரத் ஜி பி டி என்று அழைக்கப்படும் குழு, செயற்கை நுண்ணறிவு சாதனம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், மெக்கானிக் ஒருவர் தமிழ் […]

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் துணையோடு இயங்கும் குழு, மார்ச் மாதத்தில் செயற்கை நுண்ணறிவு சாதனத்தை வெளியிடுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவின் முன்னணி பொறியியல் கல்வி நிறுவனங்கள், ரிலையன்ஸ் குழுமத்துடன் இணைந்து செயற்கை நுண்ணறிவு சாதனத்தை உருவாக்கி உள்ளன. கிட்டத்தட்ட சாட்ஜிபிடி போலவே இதன் செயல்பாடுகள் இருக்கும் என சொல்லப்படுகிறது. பாரத் ஜி பி டி என்று அழைக்கப்படும் குழு, செயற்கை நுண்ணறிவு சாதனம் குறித்த வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், மெக்கானிக் ஒருவர் தமிழ் மொழியில் கேட்கும் கேள்விகளுக்கும், வங்கி ஊழியர் இந்தி மொழியில் கேட்கும் கேள்விகளுக்கும், ஹைதராபாத் டெவலப்பர் கேட்கும் கணினி சார்ந்த கேள்விகளுக்கும், சாதனம் துல்லியமாக பதில் அளிப்பது காட்டப்பட்டுள்ளது. இதற்கு வீர ஹனுமாரின் பெயரை Hanooman என சூட்ட உள்ளனர். இது செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவின் அடையாளமாக அறியப்படும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu