பிரிட்டன் நாட்டில் நடைபெற உள்ள தேர்தலில் செயற்கை நுண்ணறிவு அவதார் போட்டியிடுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஏஐ ஸ்டீவ் என்ற அவதார், பிரிட்டன் தேர்தல் களத்தில் எம்பி பதவிக்கு போட்டியிடுவதாக வெளியான தகவல் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.
பிரிட்டன் நாட்டின் பிரபல தொழிலதிபர் ஸ்டீவ் எண்டகோட் என்பவர், இந்த அவதாரை உருவாக்கியுள்ளார். இந்த அவதார் வெற்றி பெறும் பட்சத்தில், சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள தொழிலதிபர் ஸ்டீவ் எண்டகோட், பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பார். அவருக்கு பதிலாக ஏஐ ஸ்டீவ் அவதார் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த அவதார் உடன் 24 x 7 அடிப்படையில் வாக்காளர்கள் உரையாட முடியும். மேலும், இந்த அவதார், ஒரே நேரத்தில் 10000 பேருடன் உரையாடும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. தேர்தல் களத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது உலக அளவில் பேசு பொருளாகி உள்ளது.