அதிமுக பொதுக்குழு வழக்கு 3-வது நாளாக இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து ஆகியோர் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த மனுக்களை நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு பல கட்ட விசாரணைக்கு பிறகு ஜனவரி 4-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இரண்டு நாட்களாக இந்த வழக்கில் வாதங்கள் முன் வைக்கப்பட்டு வருகிறது. நேற்று ஓ. பன்னீர்செல்வம் தரப்பு வாதங்கள் நடைபெற்றது. இந்நிலையில், இன்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதம் துவங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.