இந்தியாவின் முதல் ஏர்பஸ் ஏ350-900 - ஏர் இந்தியா கையகப்படுத்தியது

September 29, 2023

குஜராத்தில் சர்வதேச நிதி அமைப்பு உள்ளது. இது கிப்ட் (GIFT City) என்று அழைக்கப்படுகிறது. இங்கு பதிவு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது. ஏர்பஸ் ஏ350-900 விமானம் இந்தியாவின் முதல் அகலமான விமானமாகவும், சர்வதேச நிதி சேவை மையத்தின் மூலம் ஒப்பந்தத்திற்கு கிடைத்துள்ள விமானமாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதனை, ஹெச் எஸ் பி சி நிதி நிறுவனத்துடனான குத்தகை படி பெற்றுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தை கையகப்படுத்தியது […]

குஜராத்தில் சர்வதேச நிதி அமைப்பு உள்ளது. இது கிப்ட் (GIFT City) என்று அழைக்கப்படுகிறது. இங்கு பதிவு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் ஏர்பஸ் ஏ350-900 விமானத்தை ஏர் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியுள்ளது.
ஏர்பஸ் ஏ350-900 விமானம் இந்தியாவின் முதல் அகலமான விமானமாகவும், சர்வதேச நிதி சேவை மையத்தின் மூலம் ஒப்பந்தத்திற்கு கிடைத்துள்ள விமானமாகவும் சொல்லப்பட்டுள்ளது. இதனை, ஹெச் எஸ் பி சி நிதி நிறுவனத்துடனான குத்தகை படி பெற்றுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானத்தை கையகப்படுத்தியது குறித்த மகிழ்ச்சி தெரிவித்த ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நிபுன் அகர்வால், கிப்ட் நகரத்தில் விமான குத்தகைக்கான மையத்தை அமைத்ததற்கு இந்திய அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இந்த விமானம் இவ்வருட இறுதிக்குள் இந்தியாவுக்கு வரும் எனவும், மார்ச் 2024 க்குள் ஏர் இந்தியா கேட்டிருந்த மீதி 5 விமானங்கள் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu