இஸ்ரேல் - ஹமாஸ் போரின் காரணமாக ஏர் இந்தியா விமான சேவை நவம்பர் இரண்டாம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே கடும் போர் நடைபெற்று வருகிறது.இதில் இதுவரை 8,000 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 19 நாட்களை தொடந்தும் போர் நடைபெற்று வருகிறது. மேலும் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை ஆபரேஷன் அஜய் திட்டத்தின் மூலம் மத்திய அரசு பத்திரமாக மீட்டு வருகின்றது. இந்த போரின் காரணமாக டெல் அவிவ் நகரம் செல்லும் அனைத்து விமான சேவைகளையும் ஏர் இந்தியா நிறுவனம் நவம்பர் இரண்டாம் தேதி வரை ரத்து செய்துள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.