கடந்த ஆண்டு, ஏர் இந்தியா என்ற ஒற்றை நிறுவனத்தின் கீழ், மூன்று விமான நிறுவனங்கள் இணைக்கப்பட்டன. தற்போது, இணைப்பின் பகுதியாக, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஏர் ஏசியா இந்தியா ஆகிய விமான நிறுவனங்களின் முன்பதிவு அமைப்பு முறைகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இதனை, ஏர் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன் தெரிவித்துள்ளார்.
முன்பதிவு அமைப்புகள் ஒருங்கிணைக்கப்பட்டதன் மூலம், விமான பயணிகள், ஒரே வலைத்தளத்தில் ஏர் ஏசியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பதிவுகளை மேற்கொள்ள முடியும். மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான பயணங்களையும் இந்த ஒருங்கிணைந்த வலைதளத்தில் பதிவு செய்ய முடியும். எனவே, இது ஏர் இந்தியாவின் ஒருங்கிணைப்பு நடவடிக்கையில் மிக முக்கிய மைல்கல் ஆக சொல்லப்பட்டுள்ளது.














