டாடா குழுமத்தின் கீழ் இயங்கும் ஏர் இந்தியா நிறுவனம், நேற்று புதிய லோகோவை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இருந்த சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களை தக்க வைத்து, புதிதாக ஊதா நிறத்தை புகுத்தி புதிய லோகோ வெளியிடப்பட்டுள்ளது. இது ‘The Vista’ என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, விமானங்களின் வால் பகுதிக்கான பிரத்தியேக வடிவமைப்பு மற்றும் தீம் பாடல் ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் சேர்மன் சந்திரசேகரன் புதிய லோகோவை வெளியிட்டு, “இது எல்லையற்ற நம்பிக்கை மற்றும் சாத்தியத்தின் அடையாளமாக இருக்கும்” என கூறியுள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன், “ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் செயல்பாட்டு மாற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய லோகோ அமைந்துள்ளதாக” கூறியுள்ளார்.