சரிவில் உள்ள ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மீட்டெடுக்கும் விதமாக, பல்வேறு திட்டங்களை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேம்பெல் வில்சன் அண்மையில் அறிவித்தார். அதன்படி, ஏர்பஸ் மற்றும் போயிங் விமான நிறுவனங்களிடம் புதிய விமானங்களை ஏர் இந்தியா நிறுவனம் வாங்க உள்ளது.
முன்னதாக, செப்டம்பர் மாதத்தில், 30 போயிங் மற்றும் ஏர்பஸ் விமானங்களை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும், விமானப் போக்குவரத்தை 25% அதிகரித்து, சந்தை முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்திருந்தது. அதன்படி, தற்போது, சுமார் 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில், புதிய விமானங்களை வாங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அவற்றில், ஏர் பஸ்ஸின் A350 மற்றும் போயிங் நிறுவனத்தின் 787, 777 ரக அகலமான 70 விமானங்களும், 300 குறுகிய விமானங்களும் அடங்கும் என்று கூறப்படுகிறது.