ஏர் இந்தியா விமான நிறுவனம், விமானிகள் அல்லாத நிறுவனத்தின் பிற பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டம் ஒன்றை அறிவித்திருந்தது. கடந்த மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க, ஏப்ரல் 30ஆம் தேதி வரை காலக்கெடு கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது, விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடுவை மே 31ஆம் தேதி வரை நீட்டித்து, ஏர் இந்தியா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனவரி 2022 ல், டாடா நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்தியது. அப்போது தொடங்கி, நிறுவனத்தில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு ஏர் இந்தியாவில் பணியாற்றிய, விமானப் பணியாளர்கள் அல்லாத பிரிவினருக்கு விருப்ப ஓய்வு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்திற்கான காலக்கெடு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.