தெற்காசியாவின் மிகப்பெரிய விமான பயிற்சி மையத்தை ஏர் இந்தியா நிறுவனம் அமைக்கிறது.
சுமார் 6 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில், மிகப்பெரிய பயிற்சி மையத்தை ஹரியானா மாநிலம் குருகிராமத்தில் ஏர் இந்தியா அமைத்து வருகிறது. இங்கு 50000 க்கும் மேற்பட்ட விமான பணியாளர்களை பயிற்றுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விமானிகளுக்கான பயிற்சி மட்டுமல்லாமல், பல்வேறு விமான பணிகளுக்கு தேவைப்படும் அனைத்து வித சேவை, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளும் இந்த மையத்தில் பயிற்றுவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2025 ம் ஆண்டில், ஏர் இந்தியாவின் விமான பயிற்சி மையம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.