அரசாங்க இடங்களில் இருந்து வெளியேறும் ஏர் இந்தியா அலுவலகங்கள்

September 10, 2022

ஏர் இந்தியா நிறுவனம், தேசிய அளவில், தனது அலுவலகங்களை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளது. அதன் பகுதியாக, அரசாங்க இடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் இருந்து ஏர் இந்தியா நிறுவனம் இந்த மாதம் முதல் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, கடந்த ஜனவரி மாத இறுதியில் டாடா குழுமம் கையகப்படுத்தியது. டாடா குழுமத்திற்கு சொந்தமாக மேலும் இரு விமான போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா குழுமம் இயக்கும் விஸ்தாரா […]

ஏர் இந்தியா நிறுவனம், தேசிய அளவில், தனது அலுவலகங்களை ஒன்றிணைக்க திட்டமிட்டுள்ளது. அதன் பகுதியாக, அரசாங்க இடங்களில் செயல்பட்டு வரும் அலுவலகங்களில் இருந்து ஏர் இந்தியா நிறுவனம் இந்த மாதம் முதல் வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

நஷ்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை, கடந்த ஜனவரி மாத இறுதியில் டாடா குழுமம் கையகப்படுத்தியது. டாடா குழுமத்திற்கு சொந்தமாக மேலும் இரு விமான போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளன. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா குழுமம் இயக்கும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் டாடாவிற்கு 51% பங்குகள் உள்ளன. குறைந்த விலை விமானச் சேவைகளை வழங்கும் ஏர் ஏசியா நிறுவனத்தில் 83.67% பங்குகள் டாடாவிற்குச் சொந்தமாக உள்ளன. இந்நிலையில், தற்போது, மூன்று விமான நிறுவனங்களையும் ஒரே அலுவலக வளாகத்தில் இயக்க டாடா குழுமம் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், விமான நிறுவனங்கள், ஒருங்கிணைந்த முறையில் செயல்பட வாய்ப்பு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. மேலும், தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இதற்காக, டெல்லியில் வாடிகா ஒன் ஆன் ஒன் காம்ப்ளக்ஸ் என்ற பெயரில் புதிய அலுவலக வளாகத்தை டாடா கட்டமைத்து வருகிறது.

ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஏர் இந்தியாவிற்கு, புதுடெல்லியில் உள்ள ஜிஎஸ்டி காம்ப்ளக்ஸ் மற்றும் ஐஜிஐ டெர்மினல் 1 ஆகிய இடங்களில், இரண்டு முக்கிய பணியகங்கள் உள்ளன. இவற்றில் பணி செய்து வரும் பணியாளர்கள், தற்காலிகமாக குருகிராம் அலுவலகத்திற்கு மாற்றப்படுகிறார்கள். வரும் 2023 ஆம் ஆண்டு முதல், புதிய அலுவலக வளாகத்தில் அவர்கள் பணி செய்வர். அவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அத்துடன், பணியாளர்கள் அவர்களது வசதியான நேரத்தில் பணி செய்யவும் அனுமதிக்கப்படுவர் " என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைமை அதிகாரி கேம்பல் வில்சன், "ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய அத்தியாத்தில், இந்த அலுவலக மாற்றம் முக்கிய நகர்வு" என்று கூறியுள்ளார். அத்துடன், சென்னை, கொச்சின் உள்ளிட்ட நகரங்களில், ஏர் இந்தியா பணியாளர்கள், புதிய அலுவலக வளாகத்திற்கு ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu