மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஏ350 விமான சேவையை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
ஏர் இந்தியா நிறுவனம் முதல் விமான நிறுவனமாக ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து அகன்ற விமானத்தை வாங்கியுள்ளது. இதுகுறித்து, ஏர் இந்தியாவின் ஏ350 விமானம் தனது விமான சேவையை 22ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த விமானம் உள்நாட்டில் இயக்கப்படும். மேலும் இந்த ஆண்டின் நடுப்பகுதியில் சர்வதேச வழித்தடங்களில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிறுவனத்திடமிருந்து 250 புதிய விமானங்களுக்கு ஏர் இந்தியா நிறுவனம் ஆர்டர் கொடுத்துள்ளது. இதில் 20 ஏ350 ரக விமானங்களும் உள்ளது. இதில் முதல் 20 விமானங்கள் திங்கட்கிழமை டெல்லியை வந்தடையுள்ளது. மீதமுள்ள விமானங்கள் மார்ச் மாதம் டெலிவரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் ஏர்பஸ் ஏ350 விமானத்தை மத்திய அமைச்சர் அதிகாரப்பூர்வமாக நேற்று தொடங்கி வைத்துள்ளார்.