டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகர நிலையில் உள்ளது என மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் காற்றின் தரம் தொடர்ந்து அபாயகரமான நிலையில் உள்ளது. இன்று காலை நிலவரப்படி, டெல்லி காற்று மாசு அளவு 433 என பதிவானது, இது மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரப்பூர்வ தகவலாக வெளிவந்துள்ளது. இந்தியாவில் காற்றின் தரக் குறியீடு 50-க்குள் இருந்தால் "நல்லது", 51 முதல் 100 வரை "திருப்திகரமானது", 101 முதல் 200 வரை "மிதமானது", 201 முதல் 300 வரை "மோசமானது", 301 முதல் 400 வரை "மிகவும் மோசமானது", மற்றும் 400 முதல் 500 வரை "அபாயகரமானது" என வகைப்படுத்தப்படுகிறது. இன்றைய நிலவரப்படி, டெல்லியில் காற்றின் தரம் "அபாயகரமானது" என்று தரப்பட்டுள்ளது. இதேவேளை, டெல்லியின் வெப்பநிலை 7.5°C என பதிவாகியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம், இன்று பகலில் மேகமூட்டமாக இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 24°C ஆக இருக்கும் என்று கணித்துள்ளது.