இந்த வாரத்தில், சீனாவில் தனது உற்பத்தி நிலையத்தை விரிவாக்கம் செய்ய உள்ளதாக ஏர்பஸ் தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து, தற்போது, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனின் சீனா பயணத்தில் அறிவிக்கப்பட்ட மற்றொரு திட்டத்தை ஏர்பஸ் அறிவித்துள்ளது. அதன்படி, GDAT என்ற சீன நிறுவனத்திற்கு 50 ஹெலிகாப்டர்களை ஏர்பஸ் நிறுவனம் விற்க உள்ளது. இவை H160 ரக ஹெலிகாப்டர்களாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
ஏர்பஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ப்ரூனோ ஈவன், இந்த தகவல்களை உறுதி செய்துள்ளார். மேலும், கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு, நிறுவனத்தின் ஹெலிகாப்டர் போக்குவரத்து மீண்டுள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே, இந்த நிறுவனத்திற்கு 26 ஹெலிகாப்டர்களை வழங்கி உள்ள ஏர்பஸ் நிறுவனம், கூடுதல் ஹெலிகாப்டர்களை வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.