கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை வருவதால் விமானங்களின் கட்டணம் உயர்ந்துள்ளது.
நாடு முழுதும் வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் சனி, ஞாயிறு தொடர்ந்து விடுமுறை வருவதாலும் மேலும் பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள மாநில மக்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு பயணம் செல்கின்றனர். இதனால் பஸ், ரயில்களில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. மேலும் பயணிகள் அனைவரும் பயணத்திற்கு விமானங்களை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் விமானங்களின் கட்டணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளன. அதில் சென்னை - திருவனந்தபுரம், சென்னை-கொச்சி, சென்னை- கோழிக்கோடு, சென்னை- கண்ணூர், சென்னை- தூத்துக்குடி, சென்னை-கோவை, சென்னை- திருச்சி, மதுரை ஆகியவற்றின் கட்டணங்களும் பல மடங்கு உயர்ந்துள்ளது