ஷிவமொக்காவில் விமான நிலையம் திறப்பதற்கு பிரதமர் மோடி இன்று கர்நாடகா வருகிறார்.
கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திரமோடி புதிய விமான நிலையத்தை நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்து வைப்பதுடன் ரயில்வே, குடிநீர், சாலை உள்ளிட்ட திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார். ஷிவமொக்கா விமான நிலையத்தை திறந்து வைத்த பிறகு பிரதமர் மோடி, பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பெலகாவி செல்கிறார். பெலகாவியில் நடக்கும் நிகழ்வில் பங்கேற்கும் மோடி, பிரதமர் கிசான் சம்மான் நிதியின் 13வது தவணையான சுமார் ரூ.16,000 கோடியை எட்டு கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு நேரடி பணம் பட்டுவாடா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்குகிறார். ரூ.930 கோடியிலான லோண்டா-பெலகாவி இடையே இரட்டை ரயில் பாதை திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.














