ஏர்டெல் சேவையில் தொலைபேசி மற்றும் தரவு பிரச்சினைகள் ஏற்பட்டது.
சென்னையில் ஏர்டெல் செல்போன் சேவையில் இன்று காலை சில பகுதிகளில் பிரச்சினைகள் ஏற்பட்டு, குறிப்பாக எழும்பூர், புரசைவாக்கம் மற்றும் வேப்பேரி பகுதியில் சேவையில் குறைபாடு ஏற்பட்டது. ஏர்டெல் போன்கள் செயல்படவில்லை. அழைப்புகளை மேற்கொள்வதில் தடையின்மை ஏற்பட்டது, சில நேரங்களில் பேசுவது கேட்கவில்லை அல்லது அழைப்புகள் துண்டிக்கப்பட்டன. மேலும், டேட்டா சேவையும் மெதுவாக செயல்பட்டது. ஏர்டெல் வாடிக்கையாளர்கள் மற்ற நெட் ஒர்க் சேவையாளர் எண்களைத் தொடர்பு கொள்ளும்போதும் இதே பிரச்சினைகள் இருந்தன. இந்தப் பிரச்சினையை ஏர்டெல் நெட் ஒர்க் அலுவலகத்தில் விசாரித்த போது, நெட் ஒர்க் மெதுவாக உள்ளதாகவும், அதை விரைவில் சரி செய்வதாகவும் தெரிவித்தனர்.