இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல், ஏர்டெல் நிறுவனம், 5ஜி இணைய சேவைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், மும்பை நகரத்தில் மட்டுமே, ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி சந்தாதாரர் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டி உள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள 5ஜி சந்தாதாரர் எண்ணிக்கை 10 மில்லியனை எட்டி உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. மும்பையில், முதல் கட்டத்திலேயே, 5ஜி சேவைகளை ஏர்டெல் நிறுவனம் வழங்கியது குறிப்பிடத்தக்கது. மேலும், தற்போதைய நிலையில், இந்தியாவின் 140 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து நகரங்கள் மற்றும் கிராமங்களில் 5ஜி சேவைகள் கொண்டுவரப்படும் என்று ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், மும்பை நகரில் மட்டுமே 1 மில்லியன் வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது நிறுவனத்தின் செயல்பாடுகளில் முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது. இது குறித்து நிறுவனம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.