புனே விமான நிலையத்தில் ஏர்டெல் 5ஜி சேவை அறிமுகம்

November 18, 2022

புனே நகரத்தில் உள்ள லோஹெகோன் விமான நிலையத்தில், ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. விமான நிலையத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் 5ஜி இணைப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 5ஜி இணைய சேவையை பெறும் முதல் விமான நிலையமாக இது திகழ்கிறது. இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மகாராஷ்டிரா மாநில செயல் நிர்வாகி ஜார்ஜ் மாதேன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அதிக வேகத்தில் தங்கு தடை இல்லா இணைய […]

புனே நகரத்தில் உள்ள லோஹெகோன் விமான நிலையத்தில், ஏர்டெல் 5ஜி பிளஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. விமான நிலையத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் 5ஜி இணைப்பு சேவை வழங்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 5ஜி இணைய சேவையை பெறும் முதல் விமான நிலையமாக இது திகழ்கிறது. இதுகுறித்து பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மகாராஷ்டிரா மாநில செயல் நிர்வாகி ஜார்ஜ் மாதேன் தெரிவித்துள்ளார். இதன் மூலம், அதிக வேகத்தில் தங்கு தடை இல்லா இணைய சேவை வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். முன்னதாக, பெங்களூரு விமான நிலையத்தில் ஏர்டெல் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன், இந்தியாவின் முக்கிய நகர மக்கள், ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி இணைப்பை அனுபவித்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu