பர்கினா பாசோவில் 100 ராணுவ வீரர்கள் கொலை

June 19, 2024

பர்கினா பாசோவில் கிளர்ச்சி குழு ஒன்று 100 ராணுவ வீரர்களை தாக்கி கொலை செய்துள்ளது. ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் ராணுவ ஆட்சி நடக்கிறது. இதனை எதிர்த்து அங்கு பல்வேறு க்கள் செயல்படுகின்றன. அவர்கள் அவ்வப்போது அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், நைஜர் நாட்டின் எல்லை அருகே மண்சிலா பகுதியில் கடந்த செவ்வாய் அன்று மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அப்பொழுது ஏராளமான […]

பர்கினா பாசோவில் கிளர்ச்சி குழு ஒன்று 100 ராணுவ வீரர்களை தாக்கி கொலை செய்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோவில் ராணுவ ஆட்சி நடக்கிறது. இதனை எதிர்த்து அங்கு பல்வேறு க்கள் செயல்படுகின்றன. அவர்கள் அவ்வப்போது அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இவர்களை கட்டுப்படுத்த ராணுவத்தினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில், நைஜர் நாட்டின் எல்லை அருகே மண்சிலா பகுதியில் கடந்த செவ்வாய் அன்று மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அப்பொழுது ஏராளமான வீடுகள் மற்றும் ராணுவ முகாம்கள் நாசமாகின. ராணுவ வீரர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு அல்கொய்தா உடன் தொடர்புடைய ஜமாத் நியூசிலாத் உல் இஸ்லாம் என்ற கிளர்ச்சி குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக அரசு தரப்பில் எதுவும் கூறப்படவில்லை. எனினும் இந்த கிளர்ச்சி குழுவிற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu