அல்கொய்தா பயங்கரவாத முகாம்: 6 பேர் கைது

August 27, 2024

ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி காட்டுப் பகுதியில் அல்கொய்தா பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி போலீசின் சிறப்பு படை பிவாண்டி காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தீவிர தேடுதலை மேற்கொண்டனர். இதன் மூலம் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் அங்கு பயிற்சி முகாம் நடத்த வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இந்நிகழ்வு, விமானப்படை நிலையம் அருகிலேயே அமைந்தது. இதனால் 6 பயங்கரவாதிகளை சிறப்பு படையினர் கைது செய்தனர். […]

ராஜஸ்தான் மாநிலம் பிவாண்டி காட்டுப் பகுதியில் அல்கொய்தா பயங்கரவாதிகளின் பயிற்சி முகாமில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லி போலீசின் சிறப்பு படை பிவாண்டி காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தீவிர தேடுதலை மேற்கொண்டனர். இதன் மூலம் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் அங்கு பயிற்சி முகாம் நடத்த வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான இந்நிகழ்வு, விமானப்படை நிலையம் அருகிலேயே அமைந்தது. இதனால் 6 பயங்கரவாதிகளை சிறப்பு படையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து டம்மி ஏ.கே.47, ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. பயிற்சியில் ஈடுபட்டவர்கள் யார், எங்கு இருந்து வந்தனர், எவ்வளவு நாட்களாக பயிற்சி பெற்றனர் என்ற விசாரணை நடைபெறுகிறது. அந்த குறிப்பிட்ட காட்டுப் பகுதியில் ஆயுத பயிற்சியின் நோக்கம் மற்றும் அருகிலுள்ள விமானப்படை பயிற்சி மையத்தை நோக்கி எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டதா என்பதற்கும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu