சோமாலியா - பயங்கரவாத தாக்குதலில் உகாண்டா பாதுகாப்பு படையினர் 54 பேர் பலி

June 5, 2023

சோமாலியா நாட்டில், பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், சோமாலியா தலைநகர் மொகதிசுவில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த உகாண்டா பாதுகாப்பு படையினரின் படைத்தளத்தை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 54 பேர் உயிரிழந்துள்ளனர். சோமாலியா அரசுக்கு எதிராக, அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு அல்கொய்தா உடன் தொடர்பு உள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளை ஒடுக்க, அமெரிக்க படைகள் […]

சோமாலியா நாட்டில், பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், சோமாலியா தலைநகர் மொகதிசுவில் இருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருந்த உகாண்டா பாதுகாப்பு படையினரின் படைத்தளத்தை குறிவைத்து தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில், பாதுகாப்பு படையைச் சேர்ந்த 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

சோமாலியா அரசுக்கு எதிராக, அல் ஷபாப் என்ற தீவிரவாத அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புக்கு அல்கொய்தா உடன் தொடர்பு உள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகளை ஒடுக்க, அமெரிக்க படைகள் உதவி வந்தன. சில ஆண்டுகளுக்கு முன்னர், அமெரிக்கா பின்வாங்கியதால், உகாண்டா ராணுவத்திடம் சோமாலியா அரசு உதவி கோரியது. அந்த வகையில், உகாண்டா ராணுவத்தினர் சோமாலியாவில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த முறை, உகாண்டா ராணுவத்தினரின் படைத்தளத்தை குறிவைத்து அல் ஷபாப் இயக்கம் தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu