காசாவில் உள்ள அல்ஷிபா மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவப் படையினர் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தினர்.
இஸ்ரேலின் உளவு அமைப்பான மசார்டின் தலைவர் டேவிட் வார்னியா போர் நிறுத்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்த கத்தாருக்கு சென்றுள்ளார். இந்நிலையில் அமைப்பினரை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ராணுவம் கூறியுள்ளது. இங்கு ஏராளமான நோயாளிகள், பொதுமக்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளனர். மருத்துவமனையை சுற்றியுள்ள பகுதிகளில் விமானங்கள் மூலம் தீவிரமான குண்டு வீச்சு தாக்குதல் நடத்தினர். மருத்துவமனையை இஸ்ரேல் பீரங்கிகளும், கவச வாகனங்களும் சுற்றி வளைத்தன. அங்கு இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் குழுவினருக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெறுவதாக தகவல்கள் வந்துள்ளன.
இது குறித்து சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், அல்ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏராளமானவர்கள் பலியானதாக அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கூறியுள்ளனர். படுகாயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்ய முடியாத அளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அச்சம் தெரிவித்துள்ளார். இந்த போரால் மக்களுக்கு பெரிய அளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதற்கிடையே இந்த மருத்துவமனையை ஹமாஸ் உறுப்பினர்கள் பயன்படுத்துவதற்கான அறிகுறிகள் உளவுத்துறைக்கு கிடைத்ததாலேயே இந்த தாக்குதல் தொடங்கப்பட்டது என்று இஸ்ரேல் ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மேலும் அந்த பகுதியில் இருந்து பொதுமக்கள் வெளியேறுமாறு ராணுவம் உத்தரவிட்டுள்ளது. காசா போரில் இதுவரை 31,726 பேர் உயிரிழந்துள்ளனர்.